Monday 4 February 2019

ஆர்ப்பாட்டம்

NFTCL தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சனையாக இருக்கின்றது வேலை வாங்கும் நிர்வாகத்திடம் கேட்டால்  ஒப்பந்ததாரரை கையை காட்டுகிறது ஒப்பந்ததாரரை கேட்டால் நிதி வரவில்லை என்கிறார் இந்த காரணங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே பிரதிமாதம் 7-ஆம் தேதி சம்பளம் வழங்கக்கோரி 5-02-2019 செவ்வாய்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது . போராட்டத்தை வலுபெற செய்வோம்  உரிய தேதியில் சம்பளத்தை பெறுவோம்.
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநில செயலாளர் தமிழ்நாடு