Wednesday 30 December 2015

செய்திகள்

CORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை 
BSNLலில்  SERVICE WITH A SMILE   
SWAS என்னும் 100 நாள் 
இன்முக   சேவைக்காலத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 
-------------------------------------------------------------------------------------------------------------------
MRS மருத்துவத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம் 08/01/2016 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
தேக்க நிலை STAGNATION பற்றி 11/01/2016 அன்று சங்கங்களுடன் 
BSNL  நிர்வாகம்  விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது BSNL  சேவையைச் சீரமைக்க 
சிறப்பு நிதி உதவி அளித்திட நமது இலாக்கா அமைச்சரை 
மத்திய  சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றக்குழுவின் பரிந்துரைகள் BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு வாரிய ஒப்புதலுக்காக 
BOARD APPROVAL  அனுப்பப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 3.5 சதம் முதல் 5 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் TTA தோழர்களுக்கு Phase -I பயிற்சி வகுப்பு சென்னை RGMTTCயில் 04/01/2016, 11/01/2016 மற்றும் 18/01/2016 ஆகிய தேதிகளில் துவங்குகின்றன.

RETIREMENT

Monday 21 December 2015

மீலாடி நபி  விடுமுறை தேதி மாற்றம்
மீலாடி நபி விடுமுறை தேதி 23-12-2015 புதன்கிழமைக்கு பதிலாக 
24-12-2015 வியாழக் கிழமையாக   மாற்றியும் தமிழ்மாநில நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday 25 November 2015

WORKS COMMITTEE

30-11-2015 காலை 11-மணியளவில் தஞ்சை GM அலுவலகத்தில்,
WORKS COMMITTEE கூட்டம் நடைபெறும்.

Tuesday 24 November 2015

பிஎஸ்என்எல் நேசம் கோல்டு 500க்குதான் முழு டாக்டைம்






பிஎஸ்என்எல் நேசம்கோல்டு திட்டத்தில் முழு டாக்டைம் குறைந்த பட்ச ரீசார்ஜ் 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் நேசம் கோல்டு திட்டம் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு 50 எம்பி டேட்டா, 25 எஸ்எம்எஸ் மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேச 5 எண்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைப்பு வாங்கும்போது இலவச நிமிடங்களும் உண்டு. பல்வேறு பலன்கள் அடங்கிய நேசம் கோல்டு பிளானுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதையடுத்து இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. அதேநேரத்தில் முழு டாக்டைம் சலுகையாக இந்த திட்டத்தில் முன்பு குறைந்த பட்சம் 200 ஆக இருந்தது. 200 மடங்குகளில் 400, 600 என ரீசார்ஜ் செய்யும்போது முழு டாக்டைம் கிடைக்கும். தற்போது இதை 500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளதுதனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 100க்கு கூட முழு டாக்டைம் வழங்கும்போது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் சேவையில் இருந்து வெளியேற தூண்டுவதுபோல் ஆகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.