Wednesday 27 September 2017

வாழ்த்துக்கள்




30.09.17                                                                                                  இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்


   1.    S.KUMARAKURUBARAN    D/MAN    THANJAVUR
  2.   V.SRINIVASAN                        ATT         TIRUVARUR

            அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...

Monday 25 September 2017

பணி நிறைவு பாராட்டு விழா



தோழர்.சீனிவாசன் ATT திருவாரூர்
பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
அதன் பதிவுகள்




மாவட்ட மாநாடு

வெற்றியுடன் நடைபெற்ற கடலூர்/விழுப்புரம் மாவட்ட NFTCL மாநாடு

 24-09-17: ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர்/விழுப்புரம் மாவட்ட தோழர்கள் தங்களது மாவட்ட மாநாட்டை ஒன்றிணைந்து  விழுப்புரத்தில் நடத்தினர். சுமார் 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
\
மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலர் சி.கே.மதிவாணன், கடலூர் ஜெயராமன், மாநிலச் செயலர் ஆனந்தன், பாபு, மாரி, அசோக்ராஜ் மற்றும் NFTE சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். NFTCL  மாநாட்டில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மாநாடு என்றால் மிகையாகாது. இதனை நினைவு கூறும் விதமாக நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது..
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 11 people, people standing and outdoor
Image may contain: 11 people, people smiling, people standing and outdoor
Image may contain: 12 people, people standing, crowd and outdoor
Image may contain: 12 people, people smiling, people standing, crowd and outdoor
Image may contain: 6 people
Image may contain: 20 people, people smiling, crowd
Image may contain: 4 people, people smiling


Sunday 24 September 2017

கூட்டுறவு சங்க



விழாக் கால முன்கடன் 

தோழர்களே!

இந்த வருடம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் விழாக்கால முன்கடன் ரூ.20,000/- ( பத்து தவணைகளில் திருப்பிசெலுத்தும்படி) வழங்கப்படும். இதற்கான புதிய விண்ணப்பங்கள் கூட்டறவு சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம். இது வரும் அக்டோபர் மூன்றாம்தேதி பட்டுவாடா செய்யப்படும்.


தகவல்:
-
எஸ். இளங்கோவன்
RGB உறுப்பினர்.



NFTCL கிளை கூட்டம் தஞ்சையில் 23.09.2017




Thursday 21 September 2017

நிகழ்வுகள்


24/09/2017
NFTCL 
கடலூர் மாவட்ட மாநாடு
விழுப்புரம்.
----------------------------------------------------------------
25/09/2017
NFTE 
தூத்துக்குடி மாவட்ட மாநாடு
தூத்துக்குடி.
----------------------------------------------------------------
26/09/2017
NFTE
மதுரை மாவட்டச்செயற்குழு
வத்தலக்குண்டு.
----------------------------------------------------------------
28/09/2017
தோழர்.சென்னக்கேசவன்
பணி நிறைவு பாராட்டு விழா
வேலூர்.
----------------------------------------------------------------
02/10/2017
NFTCL
கோரிக்கை மாநாடு
திருச்சி.
----------------------------------------------------------------
06/10/2017
NFTE 
தமிழ் மாநிலச்செயற்குழு
தஞ்சை
----------------------------------------------------------------
12/10/2017  & 13/10/2017
NFTE 
மத்திய செயற்குழு
விஜயவாடா.

Wednesday 20 September 2017

அஞ்சலி...தோழர்.S.பிச்சுமணி 



புதுவையின் மூத்த தோழர்.S.பிச்சுமணி அவர்கள் 
உடல்நலக்குறைவால் சென்னையில் இயற்கை எய்தினார். 

போராட்டங்களில் புடம் போடப்பட்டவர். 
பல்வேறு பழிவாங்குதல்களைச் சந்தித்த போதிலும் 
அயராது சங்கப்பணி ஆற்றியவர். 
புதுவை NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்தவர். 

அவரது மறைவிற்கு நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

NFTCL

நமது தோழர்.இளங்கோவன் ATT (Late) பட்டுக்கோட்டை இறந்த பிறகு சென்னை சொஷைட்டியிலிருந்து அவரது குடும்பத்திற்கு வர வேண்டிய நிலுவைதொகை போதிய ஆவணங்கள் கொடுக்கப்படாத காரணத்தால் இரண்டுஆண்டு காலமாக நிலுவையில் இருந்தது.நமது NFTCL மாவட்ட சங்கம்
தலையிட்டு நிலுவை தொகையானரூபாய் 124764/-ஐ தோழர்.இளங்கோவின்
(லேட்)மனைவியும் தற்போது நமது NFTCL உறுப்பினர் திருமதி ரேணுகா இளங்கோவனிடம் பெற்று தந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது.
முயற்சி மேற்கொண்ட மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.ரூபாய்.2000/- NFTCL சங்கத்திற்கு நன்கொடை தந்த உதவிய தோழியர்ரேணுகா இளங்கோவன் அவர்களுக்கு  கிளை சார்பாக நன்றியினை தெரிவித்து  கொள்கிறோம்.
                     

இன்னும் பல சாதனை  புரிய வாழ்த்துக்கள்  
கிளை சார்பாக    நன்றி  !   நன்றி  !

தியாகத்தை நினைவு கூர்வோம்




செப்டம்பர் 19 தியாகிகள் தினம் குடவாசல் தொலைபேசி நிலைத்தில்

நடைபெற்றது.

அதன் காட்சிகள்














Tuesday 19 September 2017

NFTCL


சிறந்த ஊழியர் விருது அறிவிப்பு

தமிழ் மாநிலத்தின் 2016ம் ஆண்டிற்கான 
சிறந்த அதிகாரிகள் மற்றும் ஊழியருக்கான 
VISHIST SANCHAR SEWA 
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள்

S.குணசேகர் – TM -  தூத்துக்குடி
S.இராதாகிருஷ்ணன் – DRIVER – நெல்லை
V.மணி – SR.TOA – காரைக்குடி
S.மைக்கேல் அல்போன்ஸ் – STM – கோவை
V.சந்திரசேகர் – SR.TOA – சென்னை
S.கிருஷ்ணன் – TTA – குடந்தை
PB.பாலாஜி – TTA – கோவை
G.பிரியா – TTA – திருச்சி

அதிகாரிகள்

S.டைட்டஸம் – SDE – நாகர்கோவில்
O.அன்பழகன் – SDE - திருச்சி
VK.முரளிதரன் – JAO – சென்னை
A.பாண்டியன் – AGM – காரைக்குடி
K.சமுத்திரவேலு – DGM – கடலூர்
V.சிவக்குமார் – SR.SDE – சென்னை
விருது பெற்ற தோழர்களுக்கு நமது நல்வாழ்த்துக்கள்.
காரைக்குடி மாவட்டத்திற்கு ஊழியர் மற்றும் அதிகாரிகள் 
என இரண்டு பிரிவிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
விருது பெற்றுள்ள தோழர்.V.மணி நமது சங்கத்தோழர் என்பதும், விரைவில் ஓய்வு பெறவுள்ள அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு மிக்க மகிழ்ச்சி.

அதிகாரிகள் பிரிவில் விருது பெற்றுள்ள 
தோழர். A.பாண்டியன் SNEA சங்கத்தின் மாவட்டச்செயலர். 
நேர்மையும் கடமை உணர்வும் கொண்ட தோழர். சங்கப்பற்று மிக்கவர். இருவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.