NFTE
மத்திய செயற்குழு 2017 பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில்
தோழர். இஸ்லாம் அகமது அவர்கள் தலைமையில்
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெறுகிறது.
--------------------------------------------------------------------------------
மத்திய பொதுத்துறை சங்கங்களின் தேசிய கருத்தரங்கம் 29/01/2017 அன்று பெங்களூரில் நடைபெறுகிறது. 01/01/2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் தனியார் நுழைவு ஆகியன பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
15/12/2016
நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களின் ஒரு நாள் ஊதியத்தை உடனடியாகப் பிடிக்குமாறு
CORPORATE
அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தற்காலிக மாற்றலுக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்காலிக மாற்றல்கள் 5 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படும் என்றும்
COPORATE
அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
நடந்து முடிந்த அதிகாரிகள் சங்கத்தேர்தலில் முதன்மை இடம் பெற்ற SNEA சங்கத்திற்கு முதன்மைச்சங்கம் என்ற தகுதியும், இரண்டாமிடம் பெற்ற AIBSNLEA சங்கத்திற்கு SUPPORT ASSOCIATION என்ற தகுதியும் அளித்து BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
இதனிடையே 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் தங்களுக்கும் முழுமையான அங்கீகாரம் வழங்கக்கோரி
AIBSNLEA
சங்கம் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஊழியர்களின் மாதாந்திர வேதனையான வைப்புநிதி GPF பட்டுவாடா இந்த மாதம் நடைபெறுவதற்கான
அறிகுறிகள் தென்படவில்லை.
அடுத்த ஆண்டு பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளது.
தற்போது 500, 1000 என யாரிடமும் கடனும் கேட்க
இயலாத சூழலில் ஊழியர்கள் பாடு படுதிண்டாட்டம்தான்.