Tuesday 16 December 2014

செய்திகள் 

பரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.