Friday 29 March 2019

New VDA for the Contract Labours issued by Govt.of India with effect from 01/04/2019.

ஊதியமே வந்தே பல மாதங்கள் ஆகின்றன  இதில் இது வேற ? என்று சலிப்புத் தட்டும் அளவிற்கு பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் நிலை உள்ளது இதற்கிடையில் அரசாங்கம் புதிய VDA விகிதத்தை  அறிவித்துள்ளது இந்த உத்தரவின்படி நமது ஒப்பந்த ஊழியர்கள் வரும் காலங்களில் பெறப்போகும் ஊதியத்தின் நிலை

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
A பிரிவு நகரத்தில்

நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த
நாள்கூலி ரூ.584/= என
நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.

B பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.466/= என்றிருந்த
நாள்கூலி ரூ.487/= என
நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.

C பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.373/= என்றிருந்த
நாள்கூலி ரூ.390/= என
நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.

இதுவரையில் இவ்வளவு VDA உயர்வு  வந்தது கிடையாது நல்ல விஷயம் தான் ஆனாலும் நமது ஒப்பந்த ஊழியர்கள் இன்றைய நிலை என்னவென்றால்  குறைந்த பட்ச சம்பளம் தருகிறீர்களோ இல்லையோ, எங்களுடைய சம்பளத்தை குறைந்தபட்சம் தரவேண்டிய தேதிக்கு தாருங்கள் என்பதே !!!

தோழமையுடன்.                                                                              K.Neelamagam  JE