Sunday 10 March 2019

தோழர்களே !
NFTCL தஞ்சை மாவட்ட  சங்கத்தின் மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் ,               மாவட்ட செயலாளர் S.இளங்கோவன், மாவட்ட பொருளர் இராஜேந்திரன் மாநில துணை செயலாளர் A. சேகர்  மற்றும் NFTE மாவட்டத் தலைவர் T.பன்னீர்செல்வம் கிளை செயலர் F.ஆரோக்கியதாஸ்
 நமது முதன்மை பொது மேலாளர் அவர்களை இன்று காலை                    09.03.2019 சந்தித்தோம்.   
ந்த மாதம் முதல் புதிய ஒப்பந்தகாரர் CIS BUREAUS FACILITY SERVICES PVT LTD ஒப்பந்தம் எடுத்துள்ளார்கள்.ஆகையால் மல்லி செக்யூரிட்டி 
ஒப்பந்தக்கார் AREA III ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் போனஸ் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும். EPF முழுமையாக கட்டப்பட வேண்டும். இவற்றை மல்லி செக்யூரிட்டி ஒப்பந்தக்காரர்  அவர்களிடம் செல்லி செய்து தருவதாக உறுதி அளித்தார். அதற்கு நான் முழு பொறுப்பு என்று கூறினார்கள்.
புதிய ஒப்பந்காரர் CIS BUREAUS FACILITY SERVICES PVT LTD          அவர்களிடம் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். AREA III உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ESI கார்டு வழங்கப்படவேண்டும்.
ஆள் குறைப்பு நடவடிக்கைக் எடுக்கக்கூடாது.போன்ற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்
.நமது முதன்மை பொது மேலாளர் அவர்கள் கோரிக்கைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள் .
AREA I ஒப்பந்த ஊழியர்களுக்கு இம் மாத சம்பளம் திங்கள் ,செவ்வாய் கிழமை வழங்குவதாக பாண்டியன் ஒப்பந்ததாரர் கூறியுள்ளார் என்று முதன்மை பொது மேலாளர் அவர்கள்  உறுதி அளித்தார்கள்.

சில பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

                                                                                                        மாவட்ட சங்கம் 







வாழ்த்துக்கள்