Friday 25 January 2019

ஏ.யூ.ஏ.பி.தலைமை இன்று (25-01-19) புதுடெல்லியில் கூடிய உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஒத்திவைத்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை துவக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இம்முறை காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றில்லாமல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் பிப்ரவரி 18 அன்று துவங்கும்.
    டிசம்பர் 3 ல் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் தொலைத் தொடர்பு துறை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற எவ்வித உருப்படியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது நமது நியாயமான கோரிக்கைகளின்  தீர்வுகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்பட்டது. எனவே தான் ஏ.யூ.ஏ.பி. தலைமை இன்று கூடிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என தீர்மானித்தது. இந்த வேலைநிறுத்தம் முழுவெற்றி அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,

T.பன்னீர் செல்வம் மாவட்ட தலைவர்