Monday 25 June 2018

தோழர்களே
NFTCL தமிழகம் சார்பாக ஒரு கல்வி அறக்கட்டளை  ஒன்று நிறுவப்படுகிறது., . இந்த டிரஸ்டிற்கு அனைத்து தோழர்களும் தாராள நிதி உதவி அளித்து ஒரு நல்ல முயற்சியை ஊக்குவிக்க வேண்டுகிறோம். இது எந்த லாப நோக்கத்திற்கும் இல்லாத ஒரு பொது அறக்கட்டளை என்பது பெருமைப்படவேண்டியதாகும்.

நமது தொலைத்தொடர்புத் துறையில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களது நியாயமான கோரிக்கைககளை வென்று அவர்களது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அருமைத் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் நற்சிந்தனையில் உருவானதே NFTCL. அந்த அமைப்பு இன்று இந்தியாவெங்கும் பரவி வருகிறது.
சமீபத்தில் திருச்சி தோழர் காமராஜ் மேற்கொண்ட ஏழைகளின் கல்விக்கு உதவும் நற்செயலை பார்த்தவுடன், ஆற்றல் இருந்தும் பணமில்லாததால் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவ பாடுபடுவோம் என்ற தோழர் CKM அவர்களின் மேலும் ஓர் நற்சிந்தனையில்

"மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் அறக்கட்டளை "
உருவாகி உள்ளது. மாமேதை மார்க்ஸைப் போல கற்றாரும் இல்லை; கற்றதை உழைக்கும் வர்க்கம் மேம்பட எழுதியோரும் இல்லை.
அவர் பெயரில் லாப நோக்கமற்ற கல்வி அறக்கட்டளை என்பது சாலச் சிறந்தது. அதேபோல., உலகப் பொதுமறையை இயற்றிய வள்ளுவப் பெருந்தகையின்
" கற்க கசடற! நிற்க அதற்குத் தக "
என்ற உயரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற துவங்கப்பட்டுள்ள அமைப்பின் பணி சிறக்க வாழ்த்தி உதவிக் கரத்தை நீட்டுவோம்!
Image may contain: one or more people and people standing






அம்பை செல்வோம்… அன்பை சொல்வோம்...
பணி நிறைவு விழா
காரைக்குடி NFTE மேனாள் மாவட்டச்செயலர்
NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்
தமிழ்மாநில உதவித்தலைவர்
அருமைத்தோழர். 
இரா.கணபதிராமன்
அவர்களின் பணிநிறைவு விழா
24/06/2018 – ஞாயிறு – காலை 10 மணி
அம்பாசமுத்திரம்.
சிறப்புரை
தோழர்.C.K.மதிவாணன்
NFTE அகில இந்திய உதவித்தலைவர்
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர்

 மற்றும் தலைவர்களும்... தோழர்களும்...

அம்பை செல்வோம்…
நம் அன்பைச் சொல்வோம்…
வாரீர்… தோழர்களே…






பெருநாள் நல்வாழ்த்துக்கள் 

ரம்ஜான்…
நோன்பு என்னும் மாண்பு சொன்ன…
இஸ்லாத்தின் புனிதத்திருநாள்..
இதுவே இன்பப்பெருநாள்…

 அனைவருக்கும் இனிய
ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்