பல மாவட்டங்களில் 3 மாத அளவில் இன்றளவும் சம்பளப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் மீது தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம் அதன் முதற்கட்டமாக மல்லி ஒப்பந்ததாரர் நேரடியாக நம்மளோட பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று விரும்பியது விளைவாக இன்று பூக்கடையில் உள்ள நமது NFTE தொழிற்சங்க அலுவலகத்தில் நமது பொதுச் செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரு மாதத்திற்குள் சரி செய்வதாக ஒப்புக் கொண்டு ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். சம்பளப் பட்டுவாடா பிரச்சனையில் தொடர்ச்சியாக நமது சங்கம் முன்கை எடுத்து வருகிறது இதற்கான தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும் ....