வைப்புநிதி
GPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக
DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என
CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள்
ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல்
செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின்
வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும்.
இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும்.
முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள் 12 மாநிலங்களிலும்,
இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில்
உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக
பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம்
விண்ணப்பிக்க முடியுமா
என்பது கேள்விக்குறியாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் IDA
ஏப்ரல் 2017 முதல்
117.1 சதமாக குறைந்துவிட்ட
IDA உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------