OUR UNION LINKS

forms

Tuesday, 24 November 2015

பிஎஸ்என்எல் நேசம் கோல்டு 500க்குதான் முழு டாக்டைம்






பிஎஸ்என்எல் நேசம்கோல்டு திட்டத்தில் முழு டாக்டைம் குறைந்த பட்ச ரீசார்ஜ் 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் நேசம் கோல்டு திட்டம் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு 50 எம்பி டேட்டா, 25 எஸ்எம்எஸ் மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேச 5 எண்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைப்பு வாங்கும்போது இலவச நிமிடங்களும் உண்டு. பல்வேறு பலன்கள் அடங்கிய நேசம் கோல்டு பிளானுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதையடுத்து இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. அதேநேரத்தில் முழு டாக்டைம் சலுகையாக இந்த திட்டத்தில் முன்பு குறைந்த பட்சம் 200 ஆக இருந்தது. 200 மடங்குகளில் 400, 600 என ரீசார்ஜ் செய்யும்போது முழு டாக்டைம் கிடைக்கும். தற்போது இதை 500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளதுதனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 100க்கு கூட முழு டாக்டைம் வழங்கும்போது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் சேவையில் இருந்து வெளியேற தூண்டுவதுபோல் ஆகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.