Friday, 23 October 2015

பூஜைக்கு வராத போனஸ்

கடந்த 5 ஆண்டுகளைப் போல்வே இந்த ஆண்டும் கானல் நீராய்ப் போனது போனஸ்.
இந்த ஆண்டு ஊழியர்கள் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது.
போனஸ் பற்றிய வரலாறுகள் பற்றியே இனி பேசி,கட்டுரைகள் எழுதப் போகிறோமா?
போனஸ் என்ற வர்த்தையையே பறிகொடுத்து இன்செண்டிவ் ஆன கதையை ஆய்வுகள் அலசி, எழுதி,பேசப் போகிறோமா?
PLB (PRODUCTIVITY LINKED BONUS) ஒப்பந்தம் போடப்பட்ட போது தோழர் குப்தா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
PLI (PROFIT LINKED INCENTIVE- இலாபத்தின் அடிப்படையில் இன்செண்டிவ்) ஒப்பந்தம் உருவான போது தோழர் நம்பூதிரியைப் போற்றும் குரல் மேலோங்கி, அதை விமர்சிக்கும் குரல்கள் குன்றிப் போயின.
PLI கமிட்டி கூட்டத்தைக்  கூட  உரிய காலத்தில் கூட்ட வைக்க நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் கமிட்டி கூடியது. மீண்டும் கூடும் என்றார்கள்.
கலைந்த கூட்டம் மீண்டும் கூடவில்லை.
19.10.2015 அன்று தர்ணா அறிவிக்கப்பட்டது. மாதம் ஒரு தர்ணா என்ற அழைப்பால் மாவட்டச் சங்கங்கள் படும் கஷ்டத்தை யார் உணர்வார்?
போனஸ் அடிப்படை உரிமை, கொடுபடா ஊதியம் என்றெல்லாம் உரக்கக் கூவி விட்டு ஆர்ப்பாட்டம், தர்ணா மட்டுமே அரங்கேற்றி  பின்னர் அமைதி காக்கப் போகிறோமா?
16.10.2015 அன்று நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
ஊழிய்ரகள் போன்ஸ் பற்றி நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் மிஞ்சியது மீண்டும் ஏமாற்றமே.
எந்த ஒரு பிரசனைக்கும் தீர்க்கமான தீர்வின்றி முடிந்தது நேசனல் கவுன்சில்.
தலமட்டங்களில் போராட்டம். ஆனால் நேசனல் கவுன்சிலில் அது பிரதிபலிக்காதது வேதனையளிக்கிறது.
கண்டனத்தை தெரிவித்து ஒரு வெளிநடப்பு  செய்யக் கூட இயலாதது வருத்தமளிக்கிறது.
போனஸ் கதை சாரி.. இன்செண்டிவ் கதை இப்படியென்றால் GPF கதை அதை விட சோகமாகியுள்ளது.
ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மாநாடுகள் நடத்தி  என்ன சாதிக்கப் போகிறோம்?
பதவிகளைத் தக்க வைக்கவா?
இத்தகைய உணர்வு அனேகமாக எல்லோருக்கும் இருக்கும்.
ஆனல் அதை வெளிப்படுத்தமுடியாத  சங்கடங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான்
இந்த செய்தி.

Wednesday, 21 October 2015

அனைவருக்கும் தசரா வாழத்துக்கள் . . . 

 

தீபாவளி – மீலாடி நபி  விடுமுறை தேதி மாற்றம்
தீபாவளி விடுமுறை தேதி 11-11-2015 புதன்கிழமைக்கு பதிலாக
10-11-2015 செவ்வாய்க்கிழமை மாற்றியும்,
மீலாடி நபி விடுமுறை தேதி 24-12-2015 வியாழக்கிழமைக்கு  பதிலாக 
23-12-2015 புதன்கிழமையாக  மாற்றியும் தமிழ்மாநில நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு நகல்

Saturday, 17 October 2015

துண்டிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு இழப்பீடு: டிராய் உத்தரவு

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தடைப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் .டிராய் உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக செல்போன் இணைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவது ’கால் டிராப்ஸ்’ (இஹப்ப் க்ழ்ர்ல்ள்) எனப்படுகிறது. இத்தகைய துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முழு கட்டணம் வசூலித்து வந்தன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், துண்டிக்கப்படும் செல்போன் இணைப்புகளுக்கு கட்டாயம் இழப்பீடு வழங்குவது குறித்து டிராய் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட அழைப்புகள், ஏற்கப்படாத அழைப்புகளில் இடம்பெறும். இந்த இழப்பீடு நாள் ஒன்றுக்கு 3 முறை தடைப்பட்ட அழைப்புகளுக்கு பெறலாம். அதற்கு மேற்பட்ட அழைப்புகள் துண்டிக்கப்படுவதனால் நுகர்வோர்கள் எந்த இழப்பீட்டை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், அழைப்பு தடைபட்டால் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க கூடிய இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
மேலும், அழைப்பு தடைபட்டதற்கான வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறித்து, அழைப்பு தடை ஆன நான்கு மணிநேரத்துக்குள் எஸ்.எம்.எஸ் அல்லது யூ.எஸ்.எஸ்.டி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டது குறித்து அடுத்த மாத ரசீதில் தெளிவாகவும் தனிக் குறியீடுடனும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தவிர சேவையில் தரக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் கீழ் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் வரை இழப்பீடை வழங்கும்படியான விதிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் விதித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Friday, 16 October 2015

JCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.


1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே...
JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தற்காலிக போனஸ் வழங்கக்கோரி...
 மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் தலைமையில் மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம் முன்னிலையில்
                ஆர்ப்பாட்டம்...

19-10-2015 - திங்கள்கிழமை
  காலை 10.30மணிக்கு 
                 இடம் : CTO  நுழைவாயில் ,
                         தஞ்சாவூர்.
போனஸ்... போராடிப் பெற்ற நமது உரிமை...
மீண்டும் போராடிப்பெறுவது... நமது கடமை...
போராடுவோம்... போனஸ் பெறுவோம்...
தயாராவீர்... தோழர்களே...

மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் 

ஆர்ப்பாட்டம் 


அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

                       மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம்  

Thursday, 15 October 2015

அக்டோபர் - 15 அப்துல் கலாம் பிறந்த நாள்




JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் 

நமது மத்திய சங்கத்தின் முழு முயற்சியால் 
14/10/2015 அன்று   JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் சில...

இலாக்கா ஊழியர்கள் வயது  55க்கு கீழ்  இருக்க வேண்டும்.
13600-25420 என்ற சம்பள விகிதத்தில்
5 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  - BE தேர்ச்சி அல்லது 3 ஆண்டு  DIPLOMA  தேர்ச்சி அல்லது  
BSc., ELECTRONICS  அல்லது  BSc., Computer Science 
அல்லது BSc. பட்டப்படிப்பில்  
PHYSICS  அல்லது MATHEMATICS படித்திருக்க வேண்டும்.

JTO Screening தேர்வு எழுதிய தோழர்களும்  
JTO Phase - I  பயிற்சி முடித்த  தோழர்களும்
JTO பதவியில்  நிரந்தரமாகப் பணி அமர்த்தப்படுவர்.