Sunday, 8 January 2017

வைப்பு நிதி



வைப்பு நிதியும் ஆதார் எண்ணும்

EPF  வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஊழியர்கள் தங்கள் ஆதார் எண்ணை 31/01/2017க்குள் இணைத்திட வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும், ஓய்வூதியப்பங்களிப்பும் நிறுத்தப்படும் 
எனவும்   அரசு  மிரட்டலாக அறிவித்துள்ளது.

பத்தாண்டுகள் உறுப்பினராக இருந்த ஊழியர்களுக்கு  அவர்களது ஓய்விற்குப்பின்  ரூ.1000/= மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.   ஊழியர்களின் சம்பளத்தில் 1.16 சதம் ஓய்வூதியப் பங்களிப்பாக மாதந்தோறும் அரசால் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழ 850 கோடி ரூபாய் ஆண்டு தோறும் அரசு ஓய்வூதியப்பங்களிப்பு செய்கிறது
ஒப்பந்த ஊழியர்கள்  31/01/2017க்குள் கட்டாயம் 
 தங்களது ஆதார் எண்ணை வைப்பு நிதிக்கணக்குடன் இணைக்கவும்..
31/01/2017க்குள் ஒப்பந்தக்காரர் இடம் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.
                           தகல் S.பிரின்ஸ்

Friday, 6 January 2017

                                            வாழ்க.. நீ.. எம்மான் 
வையத்துள் வாழ்வாங்கு..
ஜனவரி 7
தோழர். D.ஞானையா
பிறந்த நாள்
தபால் தந்தித்தோழர்களுக்கு 
ஞானப்பால் ஊட்டிய...
ஞானத்தந்தை...

நூறு ஆண்டு தாண்டும் பேறு பெற்றவன்..
நூற்றாண்டு வாழ்ந்து பேர் பெற்றவன்..

ஓயாத பேச்சு..
ஓய்வறியா உழைப்பு..
நில்லாத எழுத்து..
நிறுத்தாத சிந்தனை..

மூன்றெழுத்தில் உன் பெயர்  இருக்கும்..
மூன்றிலக்கத்தில் உன் மூச்சிருக்கும்..
வாழ்க.. நீ.. எம்மான்...
இவ்வையத்தில் வாழ்வாங்கு.. 

நிகழ்வு படக் காட்சிகள் கீழே:



































Thursday, 5 January 2017



கருத்தரங்க - அழைப்பிதழ்



Wednesday, 4 January 2017

மருத்துவப்பரிசோதனை



நேற்று  03/01/2017  CORPORATE  அலுவலகம் உத்திரவு ஒன்று வெளியிட்டுள்ளது.  அனைவருக்கும்  (GM பதவிக்கு கீழே உள்ள ஊழியர்களுக்கு) ஆண்டுக்கு ஒரு முறை (MASTER CHECKUP) மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம் எனவும் ரூ.3500/- வரை பரிசோதனைச் செலவு ஈடுகட்டப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, நாம் OUTDOOR TREATMENT எடுத்து கொள்வதை போல் இதனை பயன்படுத்திக்கொண்டு உரிய ரசீது கொடுத்து நாம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.
வாழ்த்துக்கள் 


சென்னையில் நடைபெற்ற 

BSNLEU  8 வது அகில இந்திய மாநாட்டில் மீண்டும் 

பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
தோழர்.அபிமன்யு
அவர்களுக்கு  நமது 

நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.



பொதுத்துறையாம் நம்  BSNLஜக் காத்திடவும்...

நிறைவான ஊதிய மாற்றம் பெற்றிடவும்...   

அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமை 

அவசியமான இந்தக் காலக்கட்டத்தில் 

தோழர்.அபிமன்யு அவர்கள் மீண்டும் 

தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்வுக்குரியது.

நலம்பெறவாழ்த்துக்கிறோம்.







தோழர் R.K நலம் விசாரித்த தோழர்கள் சிங் ,பட்டாபி ,